இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அனைத்துப் பிரதமர்களின் பணி மற்றும் வளர்ச்சியைக் காட்டும் நோக்கத்துடன் தில்லியில் கட்டப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தை, கடந்த 4 மாதங்களில் 80 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் இந்தியாவைப் பற்றிய தகவல்களை இளைஞர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் சேகரிக்கும் இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 15 பிரதமர்களின் வெவ்வேறு காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் அருங்காட்சியகத்தில் அதிநவீன தொழில்நுட்பம், ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகள், ஹாலோகிராம்கள், மெய்நிகர் ரியாலிட்டி, மல்டி டச், மல்டிமீடியா, இன்ட்ராக்டிவ் பாக்ஸ்கள் உள்ளிட்ட பயன்பாடுகள் என மொத்தம் 43 காட்சியகங்கள் உள்ளன.
பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் வரலாறு மற்றும் கலையின் சரியான கலவையாகும், இதில் அதிவேக டிஜிட்டல் தொழில்நுட்பம் இதுவரை பிரதமர்களின் வார்த்தைகள் மற்றும் வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது.
இந்தாண்டு ஏப்ரல் 14 அன்று, நவீன இந்தியாவின் தலைவர்கள் பற்றிய வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தைப் பார்க்கவும், தேசம் அதன் உயர்மட்டத் தலைவர்களால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.