இந்தியா

பிகார் - தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு: பாஜகவிற்கு எதிராக அணிதிரட்டலா?

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புதன்கிழமை சந்தித்து பேசினார்.

DIN

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புதன்கிழமை சந்தித்து பேசினார்.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் பிகாரில் ஆட்சியமைத்துள்ளார் நிதீஷ் குமார். பிகாரில் ஏற்பட்ட இந்த திடீர் அரசியல் திருப்பம் நாடு முழுவதும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. நிதீஷ் குமாரின் இந்த அரசியல் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வை புதன்கிழமை பிகாரில் சந்தித்துப் பேசினார். பாட்னாவில் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் முயன்றுவரும் சூழலில் சந்திரசேகர் ராவ், நிதீஷ் குமார் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT