இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தலுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி! 

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

DIN

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

டிசம்பர் 4-ஆம் தேதி தில்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தேசிய இளைஞர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, காலப்போக்கில் இந்த மனு பயனற்றதாக மாறியுள்ளதாகத் தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்த நேரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தனர். 

மாநகராட்சி தேர்தலில் தலையிட மறுத்து நவம்பர் 9ம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து மனுதாரர் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஒரு நாள்... அவந்திகா மிஸ்ர!

வியாழ உணர்வுகள்... அஞ்சு குரியன்!

யெஸ், லோகாதான்... கல்யாணி பிரியதர்ஷன்!

பிக் பாஸ் 9: வாட்டர் மெலன் ஸ்டாரை நெஞ்சில் மிதித்த விஜே பார்வதி!

SCROLL FOR NEXT