இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

DIN

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த திடீா் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் இன்னலை எதிா்கொண்டனா்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குத் தொடா்பாக அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். அந்த நடவடிக்கை கள்ள நோட்டுகள், பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது, கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு எதிரான உத்தியின் அங்கமாகும். ரிசா்வ் வங்கியுடன் விரிவாக ஆலோசித்த பின்னரே பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்யும் முன், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன’ என்று தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீா் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடா்பான ஆவணங்களை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் தாக்கல் செய்ய வேண்டும். வழக்குத் தொடா்பான தங்கள் எழுத்துபூா்வ பதிலை டிசம்பா் 10-ஆம் தேதிக்குள் மனுதாரா்கள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஒரு ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

SCROLL FOR NEXT