இந்தியா

முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக பங்கேற்கும் ஜகதீப் தன்கர்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார்.

DIN

குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

அவர், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க மாநிலங்களவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவரை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வரவேற்றார். ஜகதீப் தன்கருக்கு மாநிலங்களவை செயலாளர் அவை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

குளிர்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகளில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT