இந்தியா

எல்லையில் நடத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கோரிய ஆப்கன்: பாதுகாப்பு அமைச்சர்!

பாகிஸ்தானின் எல்லையில் உள்ள கிராமத்தைத் தாக்கியதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசு மன்னிப்பு கேட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்ப அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார். 

DIN

பாகிஸ்தானின் எல்லையில் உள்ள கிராமத்தைத் தாக்கியதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசு மன்னிப்பு கேட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்ப அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார். 

ஞாயிறன்று எல்லையில் ஒரு கிராமத்தில் இந்த தாக்குல் சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து திங்களன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆசிப், 

எல்லையில் நடைபெற்ற கொடிய தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்தார். முதலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 
ஆனால், இரண்டாவதாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கொடுத்த பதிலடி நடவடிக்கையில், ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது ஒப்புக்கொண்டது. அதன்பிறகு, எல்லைக் குழு ஒன்று கூடி, இந்த விஷயத்தை ஆய்வு செய்தது.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மை பாகிஸ்தானில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அங்கு பசியும் வறுமையும் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் எவ்வாறு போரிட்டார்களோ, அப்படித்தான்  ஆட்சி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமாபாத் விரும்புகிறது. 

காபூல் மற்றும் இஸ்லாமாபாத் ஒத்துழைக்காத வரை, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படாது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT