இந்தியா

கடைசி ரஃபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது!

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. 

DIN

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. 

பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2016, செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒப்பந்தம் செய்தது.

அதன்படி முதல்கட்டமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையுடன் சேர்க்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன. 

அந்த வகையில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், கடைசி மற்றும் 36 ஆவது ரஃபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. 

பிரான்ஸில் இருந்து புறப்பட்டு பின்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர் இன்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT