இந்தியா

ஹரியாணாவில் 22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 12 பேர் காயம்

DIN

ஹரியாணாவில் கடும் பனிமூட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் 22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். 

ஹரியாணா மாநிலம், யமுனா நகரில் இன்று அதிகாலை வழக்கம்போல் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. இந்த நிலையில் அம்பாலா-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் பஞ்சாபிலிருந்து சஹாரன்பூருக்குச் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பல வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை உடனே அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT