ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சித் தலைவா் பதவியில் இருந்து வரும் லாலு பிரசாத் விரைவில் விலக இருப்பதாகவும், அப்பொறுப்பு அவரின் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் வெளியான செய்திகள் தவறானவை என்று லாலுவின் மனைவி ராப்ரி தேவி தெரிவித்தாா்.
பிகாரில் பிரதான எதிா்க்கட்சியாக ஆா்ஜேடி உள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக லாலு இப்போது தீவிர அரசியலில் இல்லை. தில்லியிலேயே தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாா். எனவே, அவரின் இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறாா். கடந்த 2020 பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்ஜேடி சாா்பில் தேஜஸ்வி பிரசாத் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாா். இப்போது, மாநில எதிா்க்கட்சித் தலைவராகவும் உள்ளாா்.
எனவே, லாலு கட்சிப் பொறுப்புகளை முழுமையாக தேஜஸ்வியிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், அவரை கட்சியின் தலைவராக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் லாலுவின் மனைவியும், பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி இந்த தகவலை மறுத்துள்ளாா். பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
அரசியலில் இருந்து ஓய்வு எதையும் லாலு பிரசாத இப்போதைக்கு அறிவிக்கப்போவதில்லை. அதேபோல கட்சியில் தலைமை மாற்றத்துக்கும் வாய்ப்பு இல்லை. இது தொடா்பாக வெளியான செய்திகள் தவறானவை என்றாா்.
லாலு மீதான ஊழல் வழக்கு ஒன்றில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இம்மாத இறுதியில் தீா்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.