பஜனையில் இசைக்கருவியை இசைத்து மகிழ்ந்த மோடி(விடியோ)
ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, கரோல் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.
இந்தியாபஜனையில் இசைக்கருவியை இசைத்து மகிழ்ந்த மோடி(விடியோ)
ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, கரோல் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.
புது தில்லி: ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, கரோல் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலுக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களின் நலனுக்காக கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.
இதையும் படிக்க | நகர்ப்புற தேர்தல்: போஸ்டர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
தொடர்ந்து, கோயிலுக்குள் நடந்து கொண்டிருந்த பஜன் கீர்த்தனையிலும் பங்கேற்று, பாடல்களைப் பாடி, வாத்தியங்களை இசைத்து மோடி மகிழ்ந்தார். பஜன் கீர்த்தனை பாடும் பக்த குழுவினருடன் மோடி கலந்துரையாடினார்.