முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 27,553 பேருக்கு கரோனா

இந்தியாவில் புதிதாக 27,553 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் புதிதாக 27,553 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 27,553 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 284 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 9,249 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,42,84,561 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,81,770 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,22,801 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

இதுவரை மொத்தம் 1,45,44,13,005 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →