காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா 
இந்தியா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “நேற்று இரவு லேசான காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிப்பிலிருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT