காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 
இந்தியா

காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.

புல்வாமா மாவட்டம் சந்த்கம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில்  பதில் தாக்குதல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 3  பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்  ஜெய்ஷா-இ-முகமது அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தவா்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. பலியானவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், புல்வாமா பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜுவென்டஸ் அணி பகிர்ந்த வாரணாசி பட பாடல்..! தென்னிந்திய ரொனால்டோ ரசிகர்கள் மகிழ்ச்சி!

Zomato, Swiggy, Zepto Delivery பணியாளர்கள் நாடு முழுவதும் போராட்டம்! காரணம் என்ன?

கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! தாயாருக்காக மன்னிப்பு கோரிய மகன்!

ஷாஹீன் ஷா அஃப்ரிடிக்கு மீண்டும் முட்டியில் காயம்..! டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்குச் சிக்கல்!

ஒடிசா நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT