இந்தியாவில் 3,623 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 40,863 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,623 ஆக உள்ளது.
நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிரத்தில் 1,009 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 185 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 1.59 லட்சம் பேருக்கு கரோனா
100-க்கும் அதிகமாக ஒமைக்ரான் பாதிப்புகளைக் கொண்டு மாநிலங்கள்:
ஒமைக்ரான் வகை தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 1,409 பேர் குணமடைந்துவிட்டனர்.