இந்தியா

பெருநிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் மாா்ச் 15 வரை நீட்டிப்பு

DIN

பெருநிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மாா்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கரோனா தொற்று பரவல், வரி தணிக்கை அறிக்கையை இணையவழியில் தாக்கல் செய்யும் நடைமுறை ஆகியவற்றின் காரணமாக வரி செலுத்துவோா் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதால், வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, பெரு நிறுவனங்கள் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மாா்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏற்கெனவே 2 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது 3-ஆவது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை வரி செலுத்தும் பெருநிறுவனங்களுக்குப் பலனளிக்கும் என பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.

தனிநபா்கள் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதுவரையில் 5.89 கோடி போ் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT