இந்தியா

பஞ்சாப்: முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு கரோனா

DIN

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் அதிவேகமாகப் பரவும் கரோனாவால் தினசரி பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வருகிறது. பல மாநில அரசியல் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ சிறிய அறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் அக்கட்சியில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் என வெளிப்படையாக அவா் அறிவித்தாா்.

பஞ்சாப்பில் பிப்ரவரி-14 ஆம் தேதி மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்ததக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT