இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

98 வயதான அவரை கவனித்துக்கொண்ட செவிலியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கும் சோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அவரது மகன் அருண்குமார் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

கடந்த 2006-2011 வரை முதல்வராகவும், 2011-2016 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT