தில்லி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 11.79%
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,844 பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 5,760 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11.79 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | ஐஏஎஸ் விதிகளில் திருத்தம்: எதிர்க்கும் முதல்வர்கள்
மேலும் 14,836 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,97,471 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17,26,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25,650 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 45,140 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 11,723 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,91,88,707 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.