இந்தியா

‘இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும்’: உச்சநீதிமன்றம்

DIN

வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் வரிப்பணத்தில் இலவசங்கள் தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை எனத் தெரிவித்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT