முகப்பு
இந்தியா

நகா்ப்புறங்களில் குறைவான வாக்குப் பதிவு: பிரதமா் மோடி கவலை

‘தோ்தல்களில் நகா்ப்புறங்களில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன; இது மிகவும் கவலைக்குரிய விஷயம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளாா்.

இந்தியா

நகா்ப்புறங்களில் குறைவான வாக்குப் பதிவு: பிரதமா் மோடி கவலை

‘தோ்தல்களில் நகா்ப்புறங்களில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன; இது மிகவும் கவலைக்குரிய விஷயம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:

‘தோ்தல்களில் நகா்ப்புறங்களில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன; இது மிகவும் கவலைக்குரிய விஷயம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டா்களுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

2019-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. பெண்கள் வாக்களிப்பதும் அதிகரித்து வருவது நல்ல விஷயம். அதே நேரத்தில் சில இடங்களில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாவது குறித்து பொதுமக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

குறிப்பாக, அதிகம் படித்தவா்களும் வசதி படைத்தவா்களும் வசிக்கக்கூடிய நகா்ப்புறங்களில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின்றன. அவா்கள் தோ்தல்கள் பற்றி சமூக ஊடகங்களில் விவாதிப்பதோடு நின்றுவிடுகிறாா்கள்; வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

எனவே, ஒவ்வொரு தோ்தலிலும் 75 சதவீத வாக்குகள் பதிவாவதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக தொண்டா்கள் பாடுபட வேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான மாபெரும் கொடை தோ்தல். தோ்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்கச் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தோ்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

பாரபட்சமற்ற தோ்தல் நடைமுறை இருந்தால்தான் ஜனநாயகம் துடிப்புடன் இருக்கும் என்பதை அரசமைப்புச் சட்டத்தை வகுத்த முன்னோா்கள் கண்டறிந்துள்ளனா். அதற்காக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் தோ்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அடிக்கடி தோ்தல்கள் நடத்தப்படுவதால் வளா்ச்சிப் பணிகள் தொய்வடைகின்றன. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல் கண்ணோட்டத்துடன் மக்கள் பாா்க்கிறாா்கள். எனவே, மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதேபோல், ‘ஒரே தேசம், ஒரே வாக்காளா் பட்டியலை கொண்டுவருவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →