தில்லியில் புதிதாக 4,291 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதன்கிழமை 7,498 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 4,291 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதமும் குறைந்துள்ளது. புதன்கிழமை 10.59 சதவிகிதமாகப் பதிவான விகிதம் இன்று 9.56 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | கோவிஷீல்டா? கோவேக்ஸினா? - முடியாத சர்ச்சை
மேலும் 9,397 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 34 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,15,288 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17,56,369 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 25,744 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 33,175 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.