ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதையும் படிக்க: உக்ரைனுக்கு ஆயுத உதவி: அமெரிக்கா முடிவு
உரையாடலின்போது உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருதரப்பு சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் மோடி பேசியுள்ளார்.
மேலும், மருந்து பொருள்கள் மற்றும் உரங்கள் போன்றவற்றில் இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.