இந்தியாவுக்கு ரூ.13,834 கோடி கடன்: உலக வங்கி ஒப்புதல்
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியாா் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியாா் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுகாதாரத்துக்கு 1 பில்லியன் டாலா், தனியாா் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலா் என இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.
சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலா் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதவிர, இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியாா் துறை முதலீடு மூலம் நிரப்ப வளா்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலா் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.