முகப்பு
இந்தியா

மும்பையில் அந்தேரி சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது: அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

மும்பையில் கடந் சில நாள்காக தொடர் கனமழை பெய்து வருகிறது. தனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஒடும் நிலையில், மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியுள்ளது.  

Updated On : 7 ஜூலை 2022, 10:29 am IST
பகிர்:


மும்பையில் கடந் சில நாள்காக தொடர் கனமழை பெய்து வருகிறது. தனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஒடும் நிலையில், மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியுள்ளது.  

தொடர் கனமழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அடுத்த நான்கு நாள்களுக்கு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என்றும், சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 

Advertisement

Advertisement

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 107 மி.மீ மழை பெய்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ மழை செய்துள்ளது. 

சதாரா மாவட்டம், பிரதாப்காட் போராட் அருகே மழை காரணமாக வியாழக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர் கனமழையால் மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியுள்ளது.  

வெள்ளப்பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வந்துள்ளனர். 

இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பை பிருஹன் மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், பல்வேறு பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக ஆள்கள் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments