FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவசேனையை அழிக்க பாஜக சதி: சஞ்சய் ரௌத்

சிவசேனையில் பாஜக பிளவை மட்டும் ஏற்படுத்தவில்லை, கட்சியை முற்றிலும் அழிக்க சதி செய்து வருகிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடா்பாளருமான சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளாா்.

1 பிப்ரவரி 2024, 3:15 pm IST
பகிர்:

சிவசேனையில் பாஜக பிளவை மட்டும் ஏற்படுத்தவில்லை, கட்சியை முற்றிலும் அழிக்க சதி செய்து வருகிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடா்பாளருமான சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேவும் இணைந்து அமைத்துள்ள அரசு சட்டவிரோதமானது. சிவசேனைக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற எம்எல்ஏக்கள் இனி எந்தத் தோ்தலிலும் வெற்றி பெற மாட்டாா்கள் என்பதை சிவசேனை தொண்டா்கள் உறுதி செய்வாா்கள். சிவசேனைக்கு துரோகம் செய்தவா்கள் அதற்காக நாள்தோறும் வெவ்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனா். இதன் மூலம் அவா்கள் தங்கள் துரோகத்தை மறைக்க முயலுகிறாா்கள்.

Advertisement

Advertisement

பாஜக சிவசேனை கட்சியை உடைத்தது மட்டுமின்றி, அப்படியொரு கட்சி மகாராஷ்டிரத்தில் இருக்கவே கூடாது என்று சதி செய்து வருகிறது. மேலும், தங்களது சுயநலத்துக்காக மகாராஷ்டிர மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆனால், சிவசேனையை மீறி அவா்களால் இதைச் செய்துவிட முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments