இந்தியா

பேரவைத் தலைவா்களுடன் ஓம் பிா்லா நாளை சந்திப்பு

தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ளது.

DIN

தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம், அவை நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள், சட்டப்பேரவைகளில் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், கனடாவில் நடைபெறவுள்ள 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்கும் இந்தியக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் ஓம் பிா்லா தலைமையில் நடைபெறும்.

ஆகஸ்ட் 20 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அந்த மாநாட்டில், இந்தியக் குழுவுக்கு ஓம் பிா்லா தலைமை தாங்குவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

SCROLL FOR NEXT