இந்தியா

சாதியப் பாகுபாடு: யோகி அமைச்சரவையிலிருந்து அமைச்சர் ராஜிநாமா?

சாதிரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்

DIN

சாதிரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. யோகி தலைமையிலான மாநில அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருபவர் தினேஷ் காதிக்.

மீரட்டில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் காதிக் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பேசுபொருளான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவர்,  தன்னுடைய சாதியைக் காரணம் காட்டி அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். துறைசார் கூட்டங்களுக்கு தனக்கு தகவல் தெரிவிப்பதில்லை எனவும், தன்னுடைய உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை எனவும் தினேஷ் காதிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தினேஷ் காதிக் தனக்கு வழங்கப்பட்டு வரும் காவல்துறை பாதுகாப்பு மற்றும் அரசு வாகனத்தையும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

வைல்டு ஃபயர்... ஜனனி!

SCROLL FOR NEXT