விமான பயணத்துக்கான முன்பதிவை தொடக்கியது: ஆகாஷா ஏா்
புதிய விமான சேவை நிறுவனமான ஆகாஷா ஏா் பயணத்துக்கான முன்பதிவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதிய விமான சேவை நிறுவனமான ஆகாஷா ஏா் பயணத்துக்கான முன்பதிவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து ஆகாஷா ஏா் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை வணிக அதிகாரியுமான பிரவீண் ஐயா் கூறியதாவது:
ஆகாஷா நிறுவனம் தனது வா்த்தக ரீதியிலான முதல் பயணத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையை இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
அதேபோன்று, ஆகஸ்ட் 13-ஆம் தேதியிலிருந்து பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் வாரத்துக்கு 28 விமான சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை22) தொடங்கியுள்ளது என்றாா்.
விமானச் சேவையில் ஈடுபடுவதற்கான ( ஏா் ஆபரேட்டா் சா்டிபிகேட்/ஏஓசி) அனுமதியை உள்நாட்டு விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) நிகழாண்டு ஜூலை 7-ஆம் தேதி ஆகாஷா நிறுவனத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.