முகப்பு
இந்தியா

புகைபிடிக்கும் வயதை அதிகரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புகைபிடிப்பதற்கான வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக அதிகரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

புகைபிடிப்பதற்கான வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக அதிகரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

வழக்குரைஞா்களான சுபம் அவாஸ்தி, சப்தரிஷி மிஸ்ரா ஆகியோா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘நாட்டில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம் உள்ளது. மேலும் இளைஞா்கள் பலா் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவது நாட்டின் எதிா்காலத்தையே சீரழிக்கும் விஷயமாகும். எனவே, புகைப் பிடிக்க அனுமதிக்கப்படும் வயதை 18-இல் இருந்து 21-ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் அருகே உள்ள கடைகளில் சில்லறையாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது. பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு உள்ள தடையை மேலும் கடுமையாக்க வேண்டும். புகையிலைப் பொருள்கள் பரவலாகக் கிடைப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கௌல், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீங்கள் (மனுதாரா்கள்) பிரபலமடைய வேண்டும் என்றால், நல்ல வழக்குகளில் ஆஜராக வேண்டும். தேவையில்லாமல் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடாது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.