இந்தியா

சிறையில் யாசின் மாலிக் உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவா்கள் சிகிச்சை

தில்லி திகாா் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

DIN

தில்லி திகாா் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகிறாா்கள்.

ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தலைவரான யாசின் மாலிக்கை பயங்கரவாதத்துக்கு நிதி கொடுத்த வழக்கில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் கடந்த 2019-இல் கைது செய்தனா். அந்த வழக்கில் அவருக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதுவின் மகள் ரூபியா சயீது 1989-இல் கடத்தப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யாசின் மாலிக்கிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காணொலி முறையில் விசாரணை நடத்தினாா். அந்த வழக்கில் ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். ஆனால் அதற்கு அரசிடம் இருந்து பதில் வராததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

யாசின் மாலிக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவா் சிறையில் உள்ள மருத்துவ பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ரத்த நாளம் வழியாக திரவங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. அவருடைய உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT