சிவசேனை எம்.பி. மும்பையில் கைது, அமலாக்கத் துறை அதிரடி
சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரௌத் மும்பையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரௌத் மும்பையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி வழக்கு தொடர்பாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் வீட்டில் காலை முதலே அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ரௌத்தினை அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.