காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் கொல்லப்பட்டார்.
முன்னதாக, கடந்த மே-31 ஆம் குல்காமின் கோபால்போரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ரஜ்னி பாலா(36) மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்த நிலையில் மீண்டும் வெளிமாநிலத்தவரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பண்டிட் சமூக மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள அசாரண சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.