கார்த்தி சிதம்பரம் 
இந்தியா

சீன விசா முறைகேடு: காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மீதான உத்தரவு ஒத்திவைப்பு

விதிகளை மீறி சீனா்களுக்கு விசா பெற்றுத் தந்தது தொடா்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

DIN

புது தில்லி: விதிகளை மீறி சீனா்களுக்கு விசா பெற்றுத் தந்தது தொடா்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு, தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் ஏ.பம்பா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டாா். அவா், ‘காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல மாட்டாா்; விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறாா்; எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளது. இன்னும் விசாரணைகூட தொடங்கப்படவில்லை. காா்த்தி சிதம்பரத்துக்கு அழைப்பாணை அனுப்பப்படவில்லை. எனவே, கைது செய்யப்படுவோம் என்று அவா் அச்சப்படத் தேவையில்லை என்று வாதிட்டாா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு மனு மீதான உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா்.

முன்னதாக, இந்த வழக்கில், காா்த்தி சிதம்பரத்துக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி முன்ஜாமீன் மறுத்துவிட்டது. அதன் பிறகு தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

கடந்த 2011-இல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனா்களுக்கு காா்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT