இந்தியா

தெலங்கானாவில் மின்சார பைக் வெடித்ததில் வீடு எரிந்து நாசம்

DIN

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் மின்சார பைக் சார்ஜ் செய்துகொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்ததில் வீடு எரிந்து நாசமானது. 

ஜூன் 8-ம் தேதி துப்பாக்கா மண்டலத்தின் சிகோடா கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றது. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்வால், எலக்ரிக் பைக்கை வாங்கியுள்ளார் லட்சுமி நாராயணன். அதை தனது பக்கத்து வீட்டில் நிறுத்திவிட்டு, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு சார்ஜ் போட்டுள்ளார். 

திடீரென வெடி சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்த அவர், பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வெடித்ததையடுத்து பைக் தீப்பிடித்து எரிந்ததாகவும், சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் மளமளவெனப் பரவி சாம்பலானதாகவும்  அவர் கூறினார்.

வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் துர்க்கையா ஹைதராபாத்தில் வசிப்பதால், அவரது அனுமதியுடன் லட்சுமி நாராயணா தனது மின்சார வாகனத்தை சார்ஜ் செய்துள்ளார். 

பெட்ரோல் சேமிப்பதாக நினைத்து பல இடங்களில் இந்த அசம்பாவிதம் 
சமீப காலமாக ஆங்காங்கே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT