அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத் துறையில் முன்னுரிமை
அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: அக்னிபத் வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அதிக திறன் கொண்ட அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாதுகாப்பு அமைச்சக வேலைகளில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்
Advertisement
Advertisement
பாதுகாப்புத்துறை அமைச்சக வேலைகளில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டமான 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் 10 சதவீத வேலைகளை அக்னிவீரர்களுக்காக மத்திய அரசு ஒதுக்குவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.