புது தில்லி: ஆயுதப் படையில் புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடக்கு ரயில்வேயின் கூற்றுப்படி,
வெவ்வேறு வடக்கு ரயில்வே நிறுத்தத்தில் இருந்து திட்டமிடப்பட்ட மொத்தம் 18 கிழக்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அக்னிபத் போராட்டங்களை அடுத்து, தில்லிக்குச் செல்லும் 71 பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரயில் சேவைகளும் நேற்று பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் புதிய அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.