ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 50 மடங்கு அதிகரிப்பு
ரஷியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 10 சதவீதமாக உள்ளது.
ரஷியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 10 சதவீதமாக உள்ளது.
ரஷிய-உக்ரைன் போருக்கு முன்பு, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 0.2 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக நாடுகள் பலவும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.
இதனால், ரஷியாவில் அதிகஅளவில் கச்சா எண்ணெய் தேங்கி அதன் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முன்வந்தது. இதைத் தொடா்ந்து இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், ரஷியாவிடமிருந்து ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலா்கள் வரை தள்ளுபடியில் கொள்முதல் செய்தன.
இந்தியாவுக்கு அதிகஅளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி ரஷியா இரண்டாம் இடத்தைப் பெற்ளது. இப்பட்டியலில் ஈரான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதையடுத்து, இந்தியாவுக்கு வரும் ரஷிய கச்சா எண்ணெயின் அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீத அளவு இறக்குமதி மூலம் நிறைவு செய்யப்படுகிறது. சா்வதேச அளவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.