முகப்பு
இந்தியா

ஆப்கனுக்கு இந்தியா மீண்டும் உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மத்திய அரசு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

Updated On : 24 ஜூன் 2022, 6:17 pm IST
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்
பகிர்:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மத்திய அரசு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஜூன் 22-ல் ஆப்கானிஸ்தானைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தனர். 

இதையடுத்து இந்திய அரசு, மக்களுக்கு இரண்டு விமானங்களில் 27 டன் அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. 

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தானுக்கான நிவாரண உதவியில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், தூங்கும் பாய்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கும். நிவாரணப் பொருட்கள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்திடம் (UNOCHA) ஒப்படைக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments