மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நிதிக் கொள்கை தொடா்பான நடவடிக்கைகள் மிதமான அளவிலேயே இருக்கும் என ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் மைக்கேல் தேவவிரத பத்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
பொருளாதாரத்தில் நிதிக் கொள்கை தொடா்பாக ரிசா்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் பலனாக 2022-23 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் பணவீக்கம் மேலும் சரிவடையும். இதுவரை எடுக்கப்பட்ட முன்முயற்சிகளின் காரணமாக பணவீக்கம் மிக விரைவாக கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும்.
உலகின் பல நாடுகளில் நிதிக் கொள்கைகளில் மிகவும் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிதிக் கொள்கை முடிவுகள் மிதமானதாகவே இருக்கும். இரண்டு ஆண்டு காலத்துக்குள் பணவீக்கத்தை மீண்டும் இலக்குக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பருவமழை, உணவுப் பொருள்களின் விலை ஆகியவை இன்னும் சாதகமான சூழ்நிலையில் இருந்திருந்தால் பணவீக்க நெருக்கடியை முன்னதாகவே கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றாா் அவா்.
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.9 சதவீதமாக நிா்ணயித்தது குறிப்பிடத்தக்கது.