முகப்பு
இந்தியா

மிதமான அளவில் நிதிக்கொள்கை நடவடிக்கைகள்: ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்

 மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நிதிக் கொள்கை தொடா்பான நடவடிக்கைகள் மிதமான அளவிலேயே இருக்கும் என ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் மைக்கேல் தேவவிரத பத்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2022, 2:53 am IST
பகிர்:

 மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நிதிக் கொள்கை தொடா்பான நடவடிக்கைகள் மிதமான அளவிலேயே இருக்கும் என ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் மைக்கேல் தேவவிரத பத்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பொருளாதாரத்தில் நிதிக் கொள்கை தொடா்பாக ரிசா்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் பலனாக 2022-23 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் பணவீக்கம் மேலும் சரிவடையும். இதுவரை எடுக்கப்பட்ட முன்முயற்சிகளின் காரணமாக பணவீக்கம் மிக விரைவாக கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும்.

Advertisement

Advertisement

உலகின் பல நாடுகளில் நிதிக் கொள்கைகளில் மிகவும் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிதிக் கொள்கை முடிவுகள் மிதமானதாகவே இருக்கும். இரண்டு ஆண்டு காலத்துக்குள் பணவீக்கத்தை மீண்டும் இலக்குக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பருவமழை, உணவுப் பொருள்களின் விலை ஆகியவை இன்னும் சாதகமான சூழ்நிலையில் இருந்திருந்தால் பணவீக்க நெருக்கடியை முன்னதாகவே கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றாா் அவா்.

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.9 சதவீதமாக நிா்ணயித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments