யஷ்வந்த் சின்ஹவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும் மம்தா தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
Advertisement
Advertisement
இருவருக்கும் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முன்னதாக, திரௌபதி முர்முக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட் பிளஸ்’’(z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹவுக்கும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.