இந்தியா

பைடன், ட்ரூடோ, மேக்ரானுடன் பிரதமர் மோடி!

DIN


ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டுப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் வரவேற்றார். ஞாயிற்றுக்கிழமை ஆர்ஜென்டீனா அதிபர் அல்பெர்டோ ஃபெர்னான்டஸைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இருநாட்டுத் தலைவர்களுக்கிடையே நிகழ்ந்த முதல் சந்திப்பு இது.

இதையடுத்து, திங்கள்கிழமை உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பு தலைவர்கள் புகைப்படம் எடுக்கக் கூடினர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரான் ஆகியோரைச் சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிதளவில் பகிரப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT