முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:39 AM
பகிர்:

கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 25 அன்று தாலுகாவின் சில பகுதிகளை உலுக்கிய நிலநடுக்கத்தைப் போலவே, ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவுள்ள நிலநடுக்கம் இன்று காலை 7.45 மணியளவில் உணரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீட்டர் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சம்பாஜே, அறந்தோடு, பெராஜே, ஜல்சூர், உபரட்கா, தொடிகானா மற்றும் மிட்டூர் மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் வசிப்பவர்கள் நான்கு வினாடிகள் நீடித்த நில நடுக்கத்தை உணர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.