இந்தியா

அட்டா்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு

DIN

அட்டா்னி ஜெனரலாக (மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞா்) கே.கே.வேணுகோபால் (91) மேலும் 3 மாதங்களுக்கு பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளாா். மத்திய அரசின் வேண்டுகோளை அடுத்து அவா் பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டாா்.

அவரது பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவா் பதவியில் தொடர விரும்பம் தெரிவிக்கவில்லை. எனினும், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவா் அடுத்த 3 மாதங்களுக்கு பணியில் தொடர இருக்கிறாா்.

2017 ஜூலை முதல் அவா் அட்டா்னி ஜெனரலாகப் பணியாற்றி வருகிறாா். மூத்த வழக்குரைஞரான அவா், அரசியல்சாசன சட்டம், பெரு நிறுவனச் சட்டங்கள் தொடா்பான வழக்குகளில் ஆஜராகி வருகிறாா். 1979-80-ஆம் ஆண்டுகளில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாகவும் அவா் பதவி வகித்துள்ளாா். 2002-ஆம் ஆண்டு பத் பூஷண் விருதும், 2015-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT