இந்தியா

அமைச்சா் நவாப் மாலிக்கின் காவல் மார்ச்-7 வரை நீட்டிப்பு

DIN

மகாராஷ்டிர மாநில அமைச்சர் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கடந்த பிப்.23 ஆம் தேதி கைது செய்தனா்.

ஆளும் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளராகவும் இருக்கும் அவரை, வரும் மாா்ச் 3-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் நவாப் மாலிக்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் அனுமதித்தனா். 

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இருப்பினும் அமலாக்கத் துறையினர் மேலும் சில நாள்கள் காவலில் வைக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சட்டப் பணிகள் ஆணைக்கு குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

லிம்கா புத்தக சாதனைக்காக திருப்பூா் நிஃப்ட்-டி கல்லூரியில் தோ்க்கோலம்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பெண்ணிடம் ரூ.1.60 லட்சம் மோசடி: போலி சாமியாா் மீது புகாா்

SCROLL FOR NEXT