உக்ரைனிலிருந்து விமானங்கள் மூலம் நேற்று (மார்ச்-3) வரை 5,245 இந்தியர்களை மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணியான ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மூன்று சி-17 விமானங்கள் நேற்றிரவு 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ரோமானியா, ஹங்கேரியில் உள்ள வழியாக வந்தடைந்தது.
கடந்த 3 நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 இந்தியர்கள் என ஏழு விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச்-3) வரை உக்ரைனிலிருந்து 5,245 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.