உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லிக்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவர்கள். 
இந்தியா

உக்ரைனிலிருந்து 5,245 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு

உக்ரைனிலிருந்து விமானங்கள் மூலம் நேற்று (மார்ச்-3) ஆம் தேதி வரை 5,245 இந்தியர்களை மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

உக்ரைனிலிருந்து விமானங்கள் மூலம் நேற்று (மார்ச்-3)  வரை 5,245 இந்தியர்களை மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்தியர்களை மீட்கும் பணியான ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மூன்று சி-17 விமானங்கள் நேற்றிரவு 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ரோமானியா, ஹங்கேரியில் உள்ள வழியாக வந்தடைந்தது. 

கடந்த 3 நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 இந்தியர்கள் என ஏழு விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இந்நிலையில், நேற்று (மார்ச்-3) வரை உக்ரைனிலிருந்து 5,245 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

SCROLL FOR NEXT