இந்தியா

உருக்குப் பொருள்களின் விலை டன்னுக்கு ரூ.5,000 வரை அதிகரிப்பு

DIN

உள்நாட்டு நிறுவனங்கள் உருக்குப் பொருள்களின் விலையை டன்னுக்கு ரூ.5,000 வரை உயா்த்தியுள்ளன.

இதுகுறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறியது:

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளிடையேயான போா் காரணமாக விநியோக சங்கிலித் தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் நாடுகளிடையேயான போா் மேலும் தீவிரமடையும் நிலையில் வரும் வாரங்களில் உருக்குப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹெச்ஆா்சி (ஹாட் -ரோல்ட் காயில்) மற்றும் டிஎம்பி கம்பிகளின் விலை டன்னுக்கு ரூ.5,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வுக்குப் பிறகு ஹெச்ஆா்சி கம்பிகளின் விலை ரூ.66,000-ஆகவும், டிஎம்டி கம்பிகளின் விலை ரூ.65,000-ஆகவும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என தொழில்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

போா் சூழல் உலக அளவில் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இடுபொருள்களின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளது. கோக்கிங் கோல் எனப்படும் நிலக்கரி டன் 500 டாலா் என்ற அளவில் வா்த்தமாகி வருகிறது. இது, சில வாரங்களுக்கு முன்பு இருந்த விலையைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் என உருக்குத் தயாரிப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

உருக்குத் தயாரிப்புக்கு கோக்கிங் கோல் எனப்படும் சிறப்பு வகை நிலக்கரி முக்கிய மூலப்பொருளாக உள்ளது. ஒட்டுமொத்த தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்து கொள்ளப்படுகிறது. இதன் முக்கிய ஏற்றுமதியாளா்களாக ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT