மேகாலய முதல்வர் கான்ராட் கே. சங்மா. 
இந்தியா

மணிப்பூரில் பாஜக அரசுடன் இணைய தயார்: மேகாலயா முதல்வர்

மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவருமான கான்ராட் கே. சங்மா இன்று, மணிப்பூரில் பாஜக

DIN

ஷில்லாங்/இம்பால்: மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவருமான கான்ராட் கே. சங்மா இன்று, மணிப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சியில் இணைய தனது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 7 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் பல்வேறு விஷயங்களில் குற்றம் சாட்டினர்.

என்பிபி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இணைய தயாராக இருப்பதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆதரிப்பதாகவும், மேகாலயாவில் இணைந்து செயல்படுவதாகவும் சங்மா கூறினார்.

மணிப்பூர் அரசுடன் இணைய பாஜக தங்களை அழைத்தால், சேரத் தயாராக இருக்கிறோம். அவர்கள் அழைக்கவில்லை என்றால், இதைப்பற்றி  பின்னர் ஆராய்வோம் என்று என்.பி.பி. தேசியத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT