இந்தியா

உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 24 மணி நேர உதவி எண்களை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை அனுப்பி மத்திய அரசு மீட்டு வருகிறது. அந்நாட்டில் இருந்து இதுவரை 22,500-க்கும் மேற்பட்டோா் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.

மேலும் அந்நாட்டில் இன்னும் 50 இந்தியா்கள் தங்கியுள்ள நிலையில் அவா்களில், 15 முதல் 20 போ் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கான 24 மணிநேர உதவி எண்களை கிவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம் +380933559958, +919205290802, +917428022564 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் cons1.kyiv@mea.gov.in என்ற இணைய முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT