இந்தியா

தெலங்கானா: மரப்பொருள்கள் குடோனில் தீ - 11 தொழிலாளர்கள் பலி

DIN

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ராபாத்தில் உள்ள மரப்பொருள்கள் குடோன் ஒன்றில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 11 கூலித் தொழிலாளர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போய்குடா பகுதியில் உள்ள மரப்பொருள்கள் குடோன் ஒன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு  தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

இந்த தீ விபத்தில் மரப்பொருள்கள் குடோனிலேயே தங்கி வேலை பார்த்து வந்த கூலித் தொழிலாளர்களில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

குடோனில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT