புதுதில்லி: நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை தில்லியில் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோட்டி மறைவு வேதனை அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு விரைவான நீதியை உறுதி செய்ததிலும், நீதித்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி." என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.